Site icon Tamil News

உயிர்நீத்த மனிதனை மீட்டெடுத்த இயேசு : சிக்கிய புதிய ஆதாரம்!

இயேசு தனது குரலின் ஒலியைப் பயன்படுத்தி ஒரு மனிதனை மரித்தோரிலிருந்து எவ்வாறு மீட்டெடுத்தார் என்பதை பைபிள் விவரிக்கிறது, ஆனால் கிறிஸ்து ஒரு சிறிய மந்திரத்தை பயன்படுத்தியதாக பண்டைய கலைப்படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

ரோமில் கண்டுபிடிக்கப்பட்ட கதையின் நான்காம் நூற்றாண்டு ஓவியம், ஒரு நபரின் கையில் மந்திரகோல்  இருப்பதை காண்பிக்கிறது.

அது இயேசுவின் கையில் இருக்கும் மந்திரகோள் என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் பிற ஓவியங்களில் கிறிஸ்து ஒரு மந்திரக்கோல் போன்ற பொருளைப் பிடித்துக் கொண்டு ரொட்டித் துண்டுகளைப் பெருக்குவது மற்றும் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது போன்ற புகழ்பெற்ற அற்புதங்களைச் செய்வதையும் சித்தரிக்கிறது.

இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் இந்த தலைசிறந்த படைப்புகள் உண்மையில் இயேசு ஒரு தடியை வைத்திருப்பதை சித்தரிக்கின்றன எனவும் இது அவரை அந்த நேரத்தில் நன்கு அறியப்பட்ட தீர்க்கதரிசி மோசேயுடன் இணைக்கும் ஒரு வழியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனையும் இரட்சகரையும் ஒரு மந்திரவாதியாக பார்த்ததாக வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

பைபிளின் படி, இயேசு கடவுளின் சக்தியாலும், மக்களை குணப்படுத்தி, இறந்தவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் திறனாலும் அற்புதங்களைச் செய்தார், அதே நேரத்தில் உணவு மற்றும் பானங்களை உற்பத்தி செய்வதன் மூலம் கிறிஸ்தவர்களின் பார்வையில் அவரை ரோமானிய கடவுள்களுக்கு மேலாக உயர்த்தினார்.

அற்புதமான சாதனைகள் இயேசுவின் செயல்களை விளக்குவதற்கு ஒரு மந்திரவாதி என்ற மூடநம்பிக்கைக்கு சிலரைத் தூண்டியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

Exit mobile version