Site icon Tamil News

சீனா மேற்கொண்டுள்ள போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – பெனிவொங்

தாய்வானிற்கு அருகில் சீனா மேற்கொண்டுள்ள  போர் ஒத்திகைகள்  ஸ்திரமின்மையை  ஏற்படுத்துகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை ஒருதலைப்பட்சமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இதற்காக குரல்கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

பதற்றதணிப்பு குறித்து நாங்கள் தொடர்ந்தும் குரல்கொடுப்போம் எனவும் அவர் உறுதியளித்தார்.

சீனா பார்லி மீது விதித்த வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என குறிப்பிட்டுள்ள  அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த தடையை விரைவில் முடிவிற்கு கொண்டுவருவதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version