Tamil News

பாலியல் புகாரில் சிக்கிய மற்றுமொரு பிரபலம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷாவுக்கு எதிராக இளம் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகைப்போன்று தெலுங்கிலும் பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதாக நடிகை சமந்தா குரல் கொடுத்திருந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் நடன இயக்குநர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார்.

டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் ஜானி மாஸ்டர் கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு அவரையே கொரியோகிராஃபராக ஒப்பந்தம் செய்தார் விஜய். திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் ஜானி மாஸ்டர் வென்றார்.

ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியாக நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

21 வயதான அவர் துணிச்சலுடன் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹைதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் எல்லாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்கிற அதிர்ச்சி அளிக்கும் புகாரை கூறியுள்ள நிலையில், ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகார் காரணமாக 6 மாதங்கள் ஜானி மாஸ்டர் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அடிக்கடி தெலுங்கு சினிமாவில் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version