Site icon Tamil News

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை ஸ்ரீ அய்யனார் கோவில் விழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை சிவகங்கை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகள் பங்கேற்றுள்ளன 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.

வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்

பல காளைகள் காளையர்களின் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்து தப்பித்துச் சென்றது சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது

வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Exit mobile version