Site icon Tamil News

யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – கலட்டி பிரதேசத்தில் தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வீடொன்றில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.

குறித்த மாணவி இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனியாக இருந்ததாகவும், சக மாணவர்கள் நண்பகல் வேளையில் மீண்டும் அறைக்கு வந்து பார்த்தபோது மாணவி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version