Site icon Tamil News

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்களமயமாக்கல்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கடிதத்தில், எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத குரலாக ஒலிப்பதற்கும், பல்கலைக்கழக அறிவுசார் பலமான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களான உங்கள் அனைவரதும் நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்புக்களும் ஆதரவுகளுமே காரணமாகும். இருப்பினும் சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவும் அறியத்தருவதற்குமானதொரு சூழல் தற்போது எழுந்திருக்கின்றமையால் அதனை இந்தக் கடிதம் வாயிலாக அறியத்தருகின்றோம்.என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version