Site icon Tamil News

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் நேற்று (31.12) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு வீட்டை விட்டு ஓடிச்சென்றுள்ளதுடன், தாக்குதலை நடத்திய நபர்களை பிரதேசவாசிகளால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

பெற்றோல் குண்டுத் தாக்குதலால் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வீட்டின் சொத்துக்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் யாழ்ப்பாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version