Tamil News

யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அற்புதம்! நேரில் வந்து அருள்பாலித்த நாகங்கள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

இந்த காட்சியியை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மேலும், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வருடா வருடம் மகோற்சவத்திற்கு முன்னர் அம்மன் நாகவடிவில் காட்சி கொடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version