Tamil News

யாழ். அளவெட்டி வடக்கு பகுதியில் திடீரென பற்றியெறிந்த அரிசி ஆலை

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் இன்று காலை திடீரென பற்றியெறிந்த தீயினால் முற்றாக சேதமடைந்த அரிசி ஆலை.

இச் சம்பவம் தொடர்பாக, நேற்றய தினம் மாலை அரிசி ஆலையில் வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது பின்னர் இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலையை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்

இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன எரிந்து முற்றாக நாசமாகி உள்ளன

அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version