Tamil News

யாழ் – மண்டைதீவில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்றவர் கைது

இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபரொருவர் யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நேற்று(22) கைதுசெய்யப்பட்டார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நான்கு பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்

Exit mobile version