Site icon Tamil News

ஹரக் கட்டா தப்பிச் செல்ல முயன்ற சம்பவம்: மற்றுமொரு அதிகாரி கைது

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈப்பட்ட பிரபல பாதாள உலக நபரான “ஹரக் கட்டாவின்” விற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் (TID) ஒப்படைக்கப்படவுள்ளார்.

இருப்பினும், “ஹரக் கட்டாவின்” உதவியாளர் என்று அடையாளம் காணப்பட்ட மற்ற காவல்துறை கான்ஸ்டபிள் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஹரக் கட்டா கடந்த 10 ஆம் திகதி அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோதிலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version