இலங்கையின் பலப்பகுதிகளில் இன்றும் (13.10) மழையுடனான வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவுக்கு பலத்த மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுகுதிகளிலும், காலை வேளையில் லேசான மழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.