Site icon Tamil News

`டாசன் பங்களா’ விற்பனைக்கு தயாராகி வருவதாக தகவல்

கேகாலை மாவட்டத்தில் பெறுமதி மிக்க `டாசன் பங்களா’ விற்பனைக்கு தயாராகி வருவதாக சமகி ஜன பலவேக கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது ‘கேப்டன் டாசன்’ அவர்களால் கட்டப்பட்ட பங்களா தற்போது நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ளது என்றார்.

அந்த அதிகாரத்தின் கீழ் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக டாசன் பங்களா இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

டாசன் பங்களாவை ஊழியர்களுடன் கலந்துரையாடாமல் விற்பனை செய்யப் போவதாக ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பங்களாவை அருங்காட்சியகமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version