Site icon Tamil News

ரணிலின் அடுத்தக்கட்ட அரசியல் திட்டம் குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யானை மற்றும் மொட்டு சின்னம் அல்லாத புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஆசு மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என குறிப்பிட்டார்.

இதேவேளை, யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் போது அதே பிரச்சினை ஏற்படும் எனவும், தற்போதைய ஜனாதிபதி புதிய கூட்டணியில் புதிய சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version