Site icon Tamil News

லெபனானும் பேரழிவை சந்திக்க நேரிடும் – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

லெபனான் நாட்டிலிருந்து ஹெஸ்பொல்லா போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இஸ்ரேல் இராணுவத்துக்குச் சொந்தமான பீரங்கிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதிலடி தரும் விதமாக லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா நிலைகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.

காஸா அருகே முகாமிட்டுள்ள இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்து உரையாடிய பிரதமர் நேதன்யாஹு, ஹெஸ்பொல்லா போராளிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவந்தால் காஸாவைப் போலவே லெபனானும் பேரழிவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

 

 

 

Exit mobile version