Site icon Tamil News

இஸ்ரேல் படைகள் போர் நிறுத்தம் செய்ய பிரதமர் நேதன்யாகு மறுப்பு!

காசாவின் மையப்பகுதியில் இஸ்ரேல் படைகள் போர்நிறுத்தம் செய்ய பிரதமர் நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.

காசாவின் மையப்பகுதிக்கு இஸ்ரேல் படைகள் முன்னேறியிருப்பதாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸின் இருப்பிடங்களை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இப்போரின் மூலம் மறைமுகமான பாரசீக வளைகுடாவில் ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி தனது பலத்தை காட்டும் வகையில் அணு ஆயுதத்துடன் கூடிய ஃபுளோரிடா நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே காசாவுடன் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் தரப்பட்டபோதும், நேதன்யாகு போர் நிறுத்தக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்து விட்டார்.

Exit mobile version