Site icon Tamil News

லெபனானுடன் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் : போராளிகள் பலர் பலி!

லெபனானின் பெக்கா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனான் போராளிக் குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

“லெபனானில் உள்ள மெய்டவுன் பகுதியில் மொசாப் கலாப்பைத் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

விமானப்படை “லெபனானில் உள்ள மெய்டவுன் பகுதியில் மொசாப் கலாப்பைத் தாக்கி அழித்துவிட்டது” என்று இஸ்ரேலின் இராணுவம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவர் ஜமா இஸ்லாமியா குழுவின் உறுப்பினர் என்றும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜமா இஸ்லாமியா ஒரு அறிக்கையில், இரண்டு களத் தளபதிகள் – கலஃப் மற்றும் அவரது உறவினர் – தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஒரு பாதுகாப்பு ஆதாரம், கலஃப் குழுவின் ஆயுதப் பிரிவான ஃபஜ்ர் படையில் உள்ளூர் அதிகாரி என்பதை உறுதிப்படுத்தியது. இக்குழு முன்னர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியுள்ளது.

Exit mobile version