Site icon Tamil News

அமெரிக்காவிடம் இருந்து அதிக உதவிகளை பெற்றுக்கொண்ட இஸ்ரேல்‘!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவிடமிருந்து அதிக போர் உதவிகளைப் பெற்ற நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது.  அந்த நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு சுமார் 158 பில்லியன் டொலர்களை வழங்கியது.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2019 முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு 38 பில்லியன் டொலர் இராணுவ உதவியை இஸ்ரேல் பெற்றது.

அதன்படி இந்த வருடத்திற்கு 3.8 பில்லியன் டொலர்கள் இஸ்ரேலுக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிப்ரவரி 2022 இல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், அமெரிக்கா உக்ரைனுக்கு மனிதாபிமான, நிதி மற்றும் இராணுவ உதவிகளை சுமார் 75 பில்லியன் டொலர்களை வழங்கியது.

Exit mobile version