Site icon Tamil News

காசாவின் முக்கிய துறைமுக்தை தங்கள் கட்டுப்பாட்டுற்குள் கொண்டுவந்த இஸ்ரேல்

இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸுடன் நடத்திவரும் துப்பாக்கிச்சண்டை மூலம் காஸா நகரின் முக்கிய துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

காஸாவில் உள்ள ஹமாஸ் அரசுக் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்காகக் வைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் ஹமாஸ் மறைந்திருப்பதாக இஸ்ரேல் கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் நடைபெறுகிறது.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள பகுதிகளில் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் எந்நேரமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் காஸாவின் வடக்கே உள்ள துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிருப்பதாக நேற்று அறிவித்துள்ளது. காஸா நகருக்கு அருகே கடற்கரை பகுதியில் குறைந்தது ஒரு டஜன் டாங்கிகள் மற்றும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

காஸா நகரில் தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான குண்டுவீச்சு மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் ஹமாஸ் அரசின் நாடாளுமன்றக் கட்டிடம், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் ஹமாஸ் போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்றப் போவதாக அறிவித்துள்ளது.

ஹமாஸை ஒழித்துக் கட்டுவதாக சபதம் செய்து இஸ்ரேல் ராணுவம் தீவிரத் தாக்குதலை காஸா மீது நடத்தி வருகிறது. காஸாவில் இந்தச் சண்டை தொடங்கியதில் இருந்து 51 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version