இன்று அதிகாலை காசாவின் முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கான் யூனிஸ் பகுதி போரின் ஆரம்பத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இது குறித்து காசா பாதுகாப்பு படை அதிகாரி முகமது அல்-முகைர், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக பணிகள் இட ம் வருகின்றனர்.
20 முதல் 40க்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன என்றார். இந்த போரின் மிக கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தனர்.