Site icon Tamil News

IPL Update – முக்கிய இரு வீரர்கள் அணி மாற்றம்

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.

இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 2022-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது .

அதேபோல் 2022-ம் ஆண்டு முதல் லக்னோ அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

 

Exit mobile version