Site icon Tamil News

கெஹலியவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில் விசாரணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்காக சிறுவர்களை சிறைச்சாலைக்கு ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த வேன் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் வழங்கப்பட்டது.

அமைச்சரை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு வேன் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில்  சிறைச்சாலை திணைக்களம் இன்று நடத்திய விசாரணையின் போது, ​​குறித்த தினத்தில் போதியளவு பஸ்கள் போக்குவரத்துக்கு இல்லாத காரணத்தினால் குறித்த வேன் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Exit mobile version