Site icon Tamil News

கொத்மலையில் பூமிக்கு அடியில் கேட்கும் மர்ம சத்தம்!!! காரணம் வெளியானது

கொத்மலை – ஹதுனுவெவ. வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள பூமிக்கு அடியில் இருந்து மர்மமான சத்தம் எழுந்தமை தொடர்பில் இன்று (19) விசாரணை நடத்தப்பட்டது.

பேராதனை புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் முன்னாள் பேராசிரியர் திரு அதுல சேனாரத்னவின் பங்குபற்றுதலுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில நாட்களாக கொத்மலை, ஹதுனுவெவ வெத்தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள மைதானத்தின் அடியில் இருந்து இருந்து பெரும் சத்தம் எழுவது தொடர்பில் ஆராய்ந்து விரைவான தீர்வை வழங்குமாறு மக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

சர்ச்சைக்கு வழிவகுத்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், பேராசிரியர் அதுல சேனாரத்ன, சத்தத்தின் நிலைமைகள் மற்றும் காரணம் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார்.

முன்பு ஏரி இருந்த பகுதி என்பதால், அந்த பகுதிக்கு அடியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அது தீவிரமான சூழ்நிலை இல்லை என்றும், எதிர்காலத்தில் இது தீவிரமான சூழ்நிலையாக மாறும் நிலை இருப்பதாகவும் பேராசிரியர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த நிலத்தை உத்தியோகபூர்வமாக ஆய்வு செய்து, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் ஆய்வு அறிக்கையை வழங்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோருகின்றனர்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, கொத்மலை பிரதேச செயலாளர் நதீரா லக்மால் மற்றும் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version