Site icon Tamil News

மைத்திரிக்கு எதிராக 417 வழக்குகள் உள்ளதாக தகவல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஈஸ்டர் தாக்குதல் மற்றும் பல குற்றச் செயல்கள் தொடர்பாக 417 வழக்குகள் உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “குறித்த வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்ற கவலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு துரோகம் செய்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்கள் இந்த அச்சத்தை மேலும் வளர்க்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் விரும்பியவாறு செயற்படுவதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Exit mobile version