Site icon Tamil News

அமெரிக்காவிலிருந்து இந்தியா ஊடாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தகவல்

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவை வற்புறுத்துமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்ட கால உறவைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா கோரிக்கை வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போர் சட்டவிரோத போர் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மேத்யூ மில்லர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகால உறவை கொண்டுள்ளது என்றும், அது அனைவரும் அறிந்த உண்மை என்றும், அந்த தனித்துவமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவை அமெரிக்கா ஊக்குவித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version