Site icon Tamil News

ஜெர்மனியில் தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டு முதல் அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்காக வழங்கப்படும் மாதாந்தம் வழங்கப்படுகின்ற பங்களிப்பு உயர்த்தப்படவுள்ளது.

அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்காக வழங்கப்படும் மாதாந்தம் வழங்கப்படுகின்ற பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று இதற்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குழுவானது சிபாரிசு செய்துள்ளது.

தற்பொழுது மாதம் ஒன்றுக்கு அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான கட்டணமாக 18 யுரோ 36 சென்ட் அறவிடப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டில் இருந்து இந்த கட்டணமானது 18யுரோ 94 சென்டாக உயர்த்தப்படும் என்றும் நிபுணர் குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது 2020 ஆண்டு அரச வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மொத்தமாக 8.4 மில்லியன் யுரோக்கள் வருமானமாக கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டை பொருத்த மட்டில் செலவுகள் அதிகரித்து செல்லுகின்ற காரணத்தினால் இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர் குழு தமது ஆலோசனையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version