Site icon Tamil News

ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுவோருக்கு வெளியான தகவல்

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்று வருவோரின் நிதி நிலை தொடர்பாக மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் போர்கன் கிள்ட் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்களுக்கு சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஒபேட்டஸ் ஹைட் அவர்கள் உத்தேசித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் வேலை இல்லாது இருப்பதாக ஆராயப்பட்டுள்ளது.

அதனால் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்வாறு வேலை இல்லாது இருக்கும் போது தற்பொழுது ஜொப் சென்டர் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி திணைக்களமானது இவர்களுக்குரிய பணத்தை வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில் புதிய உத்தேச சட்டத்தின் படி 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தொடர்ந்து வேலை இல்லாமல் இருக்கும் பொழுது இவர்களுக்கு ஆபேட் என்ட் அம்ன்ட் என்று சொல்லப்படுகின்ற தொழில் அலுவலகமானது இவர்களுக்குரிய கொடுப்பனவு வழங்கும் என்றும்,

இதேவேளையில் இவ்வாறு இவர்கள் தொழில் இல்லாது இருக்கும் பொழுது இவர்களுக்குரிய ஆபேட் குலோஸ் ஃபெஸியர் என்று சொல்லப்படுகின்ற மற்றும் ரெண்ட்டட் ஃபெஸியர் என்று சொல்லப்படுகின்ற காப்புறுதிகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version