ஜெர்மனியில் இரட்டை பிரஜா உரிமைகளை கொண்டவர்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டு இணங்காணப்பட்டால் உடனடியாக அவர்களது ஜெர்மன் பிரஜா உரிமை மறுத்தல் வேண்டும் என்று பயண் மாநில உள் ஊர் ஆட்சி அமைச்சர் கேமன் அவர்கள் கருத்து வெளியிட்டு இருக்கின்றார்.
அண்மைக்காலங்களாக ஜெர்மனியில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் குறிப்பாக அரேபிய நாட்டவர்கள் பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணத்தினால் தற்பொழுது குடியுரிமை சட்ட பற்றிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜெர்மனியின் கூட்டு அரசாங்கமானது ஜெர்மனியில் பிரஜா உரிமை பெற்றுக்கொள்வதில் இலகு நடைமுறையை கையாள வேண்டும் என்று சில பேரணைகளை மந்திரி சபைகளில் நிறைவேற்றி இருந்தது.