Site icon Tamil News

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளுக்கு தாயான இந்திய பெண்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் பெண்ணொருவர்.

அரிய வகை நிகழ்வாக கருதப்படும் இச் சம்பவம் மே 22ம் திகதி ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் (RIMS) மருத்துவமனையில் நடந்துள்ளது.

தாயும் ஐந்து பிள்ளைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.இருப்பினும் பிள்ளைகள் போதிய அளவு எடையில் இல்லாததால் அவர்கள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் புகைப்படத்தை மருத்துவமனை அதன் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளது.

உலகில் கிட்டத்தட்ட 55,000,000 பிரசவங்களில் ஒரு பிரசவம் இதுபோல் அமையும்.இவ்வாண்டு பிப்ரவரி மாதம் போலந்து-பிரிட்டன் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தன.

 

Exit mobile version