Site icon Tamil News

பயணிகள் பேருந்து விபத்து!! 22 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள ஊன் காவல் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் 10 பெண்கள் உட்பட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.

கார்கோன் துணைப் பிரிவு அதிகாரி (காவல்துறை) ராகேஷ் மோகன் சுக்லா, இந்தூர் நோக்கிச் சென்ற பேருந்து, மாவட்டத் தலைமையகத்திலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள டோங்கர்கான் அருகே போராட் ஆற்றுப் பாலத்தில் கீழே விழுந்ததாக தெரிவித்தார்.

ஆறு முற்றிலும் வறண்ட நிலையில் காணப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் கார்கோன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதிளை கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுக்லா கூறினார். முதற்கட்ட தகவலின்படி, அவருக்கு தூக்கம் கலைந்ததாகவும், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தெரிகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version