இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி x கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் எமது மக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நாம் செயற்பட முடியும் என புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க x கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.