Site icon Tamil News

யாழில் சஜித்தின் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை – இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஒருவர் கூட சமூகம் அளிக்காத நிலையில் கூட்டம் கைவிடப்பட்டது.

இப்பிரச்சாரக் கூட்டம் வடமராட்சி குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் 10. 00 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

பிரச்சார கூட்டத்திற்கு சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி, மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 10 மணிக்கு பிரச்சார கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. அங்கு இசை நிகழ்வு கதிரைகள் மட்டும் பார்வையாளராக இருக்க இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

ஆனால் 11.00 மணிக்கு கூட்டம்  இடம்பெறும் 12 .00 மணிக்கு இடம்பெறும் என மாற்றி மாற்றி கூறிய நிலையில் பிற்பகல் 2.00 மணி ஆகியும் கூட்டத்துக்கு ஒருவர் கூட சமூகமளிக்காக நிலையில் பிரச்சாரக் கூட்டம் கைவிடப்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் ஐவர், பாதுகாப்புக்கு வருகை தந்த இருபது வரையான பொலிசார் ஊடகவியலாளர்கள் சிலர் மட்டுமே அங்கு காணப்பட்டனர்.

கூட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிசார் தமது கடமைகளை கைவிட்டு சென்றனர்.

Exit mobile version