Site icon Tamil News

கொதிகலனில் விழுந்து இந்தியர் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

வெலிப்பென்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்திய பிரஜை ஒருவர், தொழிற்சாலை வளாகத்திலுள்ள சுடு நீர் கொதிகலனில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஜே. ராஜ்பாய் என்ற 34 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (30) இடம்பெற்ற சம்பவத்தில், தொழிற்சாலையில் நிறுவப்பட்டிருந்த சுடு நீர் கொதிகலனுக்குள் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், 34 வயதான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிபென்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version