Site icon Tamil News

அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பம் – குடும்பத்தார் விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா – பிரதீபா அமர்நாத் என்ற தம்பதியும் அவர்களது 6 வயது மகனும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூவரது சடலங்களும் கடந்த சனிக்கிழமை மேரிலேண்ட் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனைவியையும் மகனையும் சுட்டுக் கொன்ற பின் யோகேஷ் நாகராஜப்பா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகியும் உடல்களைப் பெற முடியவில்லை எனவும் , மூவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யோகேஷின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version