இலங்கையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான வாய்ப்புக்காக காத்திருப்பதாக இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒஎன்ஜிசி நிறுவனத்தின் தலைவர் ராஜர்ஷி குப்தா, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான பாதை வரைபடத்தை இலங்கை வெளியிடும் வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.