Tamil News

இந்தியன் தாத்தா கெட்டப் போட்டு குதிரையில் கூல் சுரேஷ்… கடுப்பான ரசிகர்கள்

இந்தியன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு வெளியான நிலையில், ரோகிணி தியேட்டர் முன்பாக நடிகர் கூல் சுரேஷ் குதிரை மீது இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து ரசிகர்களை சந்தித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படம் பற்றிய விமர்சனங்களும் விவாதங்களும் களைகட்டி வரும் நிலையில், வழக்கம் போல கூல் சுரேஷ் தியேட்டரில் தனது அலப்பறையை ஆரம்பித்துள்ளார்.

இந்தியன் தாத்தா கெட்டப்பில் கையில் டம்மி கத்தியுடன் கூல் சுரேஷ் ரோகிணி தியேட்டருக்கு தனது ரசிகர்களுடன் வந்து, “தாத்தா வராரு.. கதறவிடப் போறாரு” என படத்திற்கான புரமோஷனை செய்திருந்தார்.

குதிரையில் ஏன் வந்தேன் என்றால், பல போராட்டங்களை செய்தவர்கள் எல்லாம் குதிரையில் வந்தவர்கள் தான். இந்த படம் வெளியாக ஷங்கரும், கமல்ஹாசன் சாரும் பல போராட்டங்களை சந்தித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்த லைகா சுபாஷ்கரன் சாரின் போராட்டம் ரொம்ப பெரிது, அதான் குதிரையில் வந்தேன் என்றார்.

படத்தை தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க இந்தியன் படத்தை நானெல்லாம் சிறு வயதில் பார்த்தேன் எனக் கூறியுள்ளார். இந்தியன் தாத்தா மாதிரி இல்லை கூர்கா மாதிரி இருக்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Exit mobile version