Site icon Tamil News

பயங்கரவாதத்தை இந்தியா ஒடுக்கி வரும் இந்தியா!!! மோடி பெருமிதம்

 

கடந்த 26ம் திகதியுடன் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

அந்த பயங்கர தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் சிறப்பு நினைவு கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தார்.

இந்த நாளை இந்தியா ஒருபோதும் மறக்க முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

மும்பை மாநகரம் முழுவதையும் உலுக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்றார்.

ஆனால், இந்தியாவின் துணிச்சலால் அந்த சிரமங்களை சமாளிக்க முடிந்தது என்றும், தற்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒடுக்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version