Site icon Tamil News

இந்தியா – காங்கேசன்துறை துறைமுகத்திற்கான கப்பல் சேவை ஆரம்பம்!

இந்தியாவின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான பயணிகள் கப்பல் சேவை நாளை (06.10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி சேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தின் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலானது, நாகபட்டினம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் நாளைய தினம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கான பயணத்தை சோதனை முறையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனை ஓட்டம் வெற்றியடையும் பட்சத்தில், குறித்த சேவையை வரும் ஜனவரி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version