Site icon Tamil News

பல இலக்குளை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த இந்தியா!

பல இலக்குகளை  துல்லியமாக தாக்கக்கூடிய  உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணையின் முதல் சோதனை ஓட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணையானது பல இலக்குகளை தாக்கிவிட்டு  மீண்டும் வரக்கூடிய வகையில் மறு நுழைவு வாகனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவுடனான அதன் மூலோபாயப் போட்டி வளர்ந்து வருவதால், இந்தியா 1990 களில் இருந்து அதன் நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

2021 ஆம் ஆண்டில், இந்தியா 5,000 கிலோமீட்டர் (3,125 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி-5ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது. அக்னி ஏவுகணைகள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகும்.

 

Exit mobile version