Site icon Tamil News

ஜெர்மனியில் அதிகரிக்கப்படும் உதவித் தொகை

ஜெர்மன் அரசாங்கமானது நோயாளிகள் மற்றும் மாற்று திறனாளிகளை பராமரிப்பதற்காக வழங்கப்படுகின்ற நிதியத்தை ஜனவரி முதலாம் திகதி உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வலது குறைந்த தன்மையுடையவர்களுக்கு இது வரை காலமும் 316 யுரோக்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி முதலாம் திகதி இந்த தொகையானது 338 யுரோவாக உயர்த்தப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.

மேலும் வலது குறைந்தவர்களுக்கான நிலைபாட்டில் இதுவரை காலமும் 545 யூரோக்கள் வழங்கப்பட்டு வந்ததுடன்,

எதிர்வரும் வருடம் இந்த தொகையானது 562 யுரோக்கள் உயர்த்தப்படும் என்றும் தெரியவந்து இருக்கின்றது. இதைபோல் பிளேக்கிராஃப்ட்னாலு என்ற விடயத்துக்கு இதுவரை காலமும் 728 யூரோக்கள் வழங்கப்பட்டு வந்ததாகவும், எதிர்வரும் வருடம் 764 யூரோவாக உயர்த்தப்படவுள்ளது.

Exit mobile version