Site icon Tamil News

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 மே மாதத்தில் இலங்கை பணியாளர்களின் பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி – மே 2023) மொத்த எண்ணிக்கை USD 2,346.9 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது.  இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது   75.7 சதவீதம் அதிகமாகும்.

விரிவடைந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறைக்கு எதிராக கணிசமான தலையீட்டை வழங்குவதுடன், அதன் மூலம் நாட்டின் வெளித் துறையின் மீள்தன்மையை மேம்படுத்த உதவியாகவுள்ளது எனத் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாயின் முக்கிய தூணாக தொழிலாளர்களின் பணம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version