மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதி சோபித ராஜகருணா, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று (07) பதவியேற்றார்.
அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதியான எம்.சி.பீ. சஞ்சீவ மொறாயஸ் அவர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.