Site icon Tamil News

கொவிட் தொற்றுக்கு மத்தியில், கொடிய வைரஸை பரிசோதித்து வரும் சீன விஞ்ஞானிகள்!

சீன ஆராய்ச்சியாளர்கள் 2019 டிசம்பரில் கோவிட்-19 வைரஸை உலகிற்கு அடையாளப்படுத்துவற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதனை வரைபடமாக்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் விசாரணை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

டிசம்பர் 28, 2019 அன்று அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் தரவுத்தளத்தில் SARS-CoV-2 வைரஸின் கிட்டத்தட்ட முழுமையான வரிசையை சீன ஆராய்ச்சியாளர்கள் பதிவேற்றியதாக ஆவணங்கள் கூறுகின்றன.

இருப்பினும், சீன அதிகாரிகள் உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) ஜனவரி 11, 2020 அன்று மட்டுமே தரவைப் பகிர்ந்து கொண்டனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் சீனா ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், கொடிய இறப்புகளை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், ஒரு சமீபத்திய ஆய்வில், சீன விஞ்ஞானிகள் GX_P2V என அழைக்கப்படும் ஒரு கொடிய வைரஸாகக் கருதப்படுவதைப் பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது 100% எலிகளைக் கொல்லும் திறன் கொண்டது எனவும்,  அதன் மூளை மனிதர்களின் மரபணு மேட்ரிக்ஸைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுவதுடன்,  இந்த வைரஸ் SARS-CoV-2 இன் பண்புகளை ஒத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

பெய்ஜிங் இரசாயன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, நோய்த்தொற்று ஏற்பட்ட ஐந்து நாட்களுக்குள் எலிகள் கணிசமான அளவு எடையை இழந்ததாகவும், அவற்றின் கண்கள் வெள்ளை நிறமாக மாறி எட்டு நாட்களுக்குப் பிறகு அவை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு விரைவான இறப்பு விகிதத்தைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version