Site icon Tamil News

பாகிஸ்தானில் பொலிஸாரின் டிரக் மீது பயங்கரவாத தாக்குதல் : 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி!

பொலிஸாரை ஏற்றிச் சென்ற டிரக் அருகிலான பயங்கரவாத தாக்குதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் நாடு முழுவதும் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், நடைபெறவிருந்த போலியோ நோய் தடுப்புக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கு சுமார் 25 பொலிஸாருடன் சென்ற டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பஜவுர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத்தாக்குதலால் அப்பகுதியில் நடைபெறவிருந்த போலியோ தடுப்பூசி முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version