Site icon Tamil News

மெக்சிகோவில், மனித எச்சங்கள் அடங்கிய பைகள் மீட்பு!

மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை  மீட்டுள்ளனர்.

கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய குறித்த பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அதில், ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை .

மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழுபேர் காணாமல்போனமை குறித்த தகவல்களை தொடர்ந்து தேடுதல்களை ஆரம்பித்தவேளை இந்த மனித எச்சங்கள்மீட்கப்பட்டன என தெரிவித்துள்ள அரசாங்க அதிகாரிகள் பள்ளத்தாக்கில் தேடுதல்களை மேற்கொண்டவேளை மனித எச்சங்களை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version