Site icon Tamil News

கிளிநொச்சியில் மின்கம்பத்தை முறித்துக்கொண்டு பாய்ந்து விபத்துக்குள்ளான பேருந்து!

கிளிநொச்சியில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் பேருந்து ஒன்று இன்று (27.01) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தை முறித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்துள்ளது.

இவ்விதத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version