Site icon Tamil News

ஜெர்மனியில் தந்தை – மாமாவுக்கு இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சந்தேகத்திற்கிடமான கத்திக்குத்து தாக்குதலில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹாம்பர்க் மாவட்டத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்துள்ளனர்.

சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலாளி 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டார்.

வடக்கு ஜேர்மன் நகரின் பில்ஸ்டெட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட இருவருக்குமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 58 மற்றும் 61 வயதுடைய ஆண்களுக்கு கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்கள் கொலையாளியின் மாமா மற்றும் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version