Site icon Tamil News

கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து கீழே குதித்த பயணியால் பரபரப்பு!!

கனடாவில் உள்ள டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி ஏர் கனடா விமான நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

அதில் இருந்த பயணி ஒருவர் அமர்வதற்கு பதிலாக, விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென விமானத்தின் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்திருக்கிறார். 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் அவசரகால சேவை துறையினர் அந்த பகுதிக்கு உடனடியாக வரவழைக்கப்படனர். அந்நபரை ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர் இணைந்து மீட்டனர். இதனால், 6 மணிநேரம் வரை விமானம் புறப்பட்டு செல்ல காலதாமதம் ஏற்பட்டது.

அந்த நபர் விமானத்தில் ஏறும்போது, மற்ற பயணிகளை போன்று இயல்பாகவே காணப்பட்டார். இதுபற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் இந்த சம்பவத்திற்காக கைது கைது செய்யப்பட்டாரா? என்ற விவரம் வெளிவரவில்லை.

Exit mobile version