Tamil News

பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை செய்ய 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கத்தின் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் நச்சு போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக அளிக்கும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Exit mobile version