Site icon Tamil News

இலங்கை தபால் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படமாட்டாது என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரையும், உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமது திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம் ஒருபோதும் வங்கி அட்டை மற்றும் கடனட்டை தகவல்கள் கோரப்படமாட்டாது இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version